search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலழகர் பெருமாள்"

    • குதிரை வாகனம் 6 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது.
    • உள்ளே தேக்குமரத்தாலும், கீழ் தளத்தில் கோங்கு மரத்தால் உருவாக்கப்பட்டது.

    மதுரையை சேர்ந்த பெண் பக்தர் ஹரிணி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கூடலழகர் கோவிலுக்கு வந்த போது அங்குள்ள மரத்தினால் ஆன குதிரை வாகனத்தை கண்டார். மேலும் அவருக்கு அழகர்கோவில் உள்ள தங்க குதிரை போன்று கூடலழகர் பெருமாள் கோவிலிலும் தங்க குதிரை வாகனம் செய்ய நினைத்தார்.

    இது குறித்து கோவில் அதிகாரியிடம் தனது எண்ணத்தை தெரிவித்தார். அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர். அதை தொடர்ந்து ஸ்பதியான செல்வராஜ், அவரது அண்ணன் தங்கத்துரையிடம் இந்த குதிரை வாகனம் செய்யும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது குதிரை வாகனம் செய்து கோவிலில் நேற்று முன்தினம் மாலை ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அன்று இரவு புதிய தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். இது குறித்து ஸ்பதி செல்வராஜ் கூறும் போது:-

    குதிரை வாகனம் 6 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. உள்ளே தேக்குமரத்தாலும், கீழ் தளத்தில் கோங்கு மரத்தால் உருவாக்கப்பட்டது. 18 கிலோ தாமிர தகட்டை பாலீஸ் செய்து, அதனை பாண்டிய நாட்டு சிறப்புபடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் மீது தங்க முலாம் பூசி குதிரை வாகனத்தை உருவாக்கினோம் என்றார்.

    • கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை

    மதுரை மத்தியில் அமைந்துள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான கூடலழகர்பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து சுவாமி-அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை, கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 8-ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் குதிரை வாக னத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் இன்று காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.

    கோவிந்தா கோஷங்கள் முழங்க 6.30 மணி அளவில் ேதரோட்டம் தொடங்கியது. பெண்கள், இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திரு ப்பரங்குன்றம்சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசையந்து வந்து கண்கொள்ளா காட்சி யாக இருந்து. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்குள் தேர் நிலையை வந்தடைந்தது. தேேராட்டத்தை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். நாளை மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிநடக்கிறது. 5-ந்தேதி கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றாங்கரையில் உள்ள ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்தி ரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சன மாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    ×