search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைச்சேத சீரமைப்பு பணிகள்"

    • மழையின் காரணமாக பலத்த சேதம் அடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
    • ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நீர்வளத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் - திரு வனந்தபுரம் ரெயில் பாதையில் பேயன்குழி ரெயில்வே பாலம் அருகில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக பலத்த சேதம் அடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இப்பகுதியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பழுதடைந்த பகுதி களை சீரமைத்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்தி பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் துறை களுக்கு அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் ரூ.2.25 கோடி மதிப்பில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, பாலத்தின் மேலும் கீழும் நிரந்தர வெள்ளத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆய்வு செய்யப் பட்டது.

    அதனைத்தொடர்ந்து சித்திரங்கோடு - சுருளக்கோடு சாலையில் காயக்கரை பகுதியில் ஓடும் கால்வாய்க்கு மேல் நெடுஞ்சாலை துறை சார்பாக ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டதோடு, ஆற்றில் நீர் தேங்காமல் அவ்வழியாக நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளு மாறும், பணிகளை விரைந்து முடித்திடவும் நெடுஞ் சாலைத்துறை அலுவலர் களுக்கு அறிவுறுத் தப்பட்டது.

    மேலும் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதி வழி யாக செல்லும் நெய்யாறு பிரதான கால்வாயில் கன மழையினால் பாதிக்கப்பட்ட சாலை பக்கச்சுவரை ரூ.34 லட்சம் மதிப்பில் நீர்வளத்துறையின் சார்பில் நிரந்தரமாக புனரமைப்பு செய்யும் பணிகள் நடக்கிறது.

    இதனை பார்வையிட்ட தோடு, குமாரகோவில் வழியாக செல்லும் பத்மநாப புரம் புத்தனார் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் முடிக் கப்பட்ட பணியினையும் பார்வையிட்டு, முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது நீர் வளத்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் லாரன்ஸ், மெல்கி சதேக் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.]

    ×