search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுர்த்தசி"

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர்.
    • அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர்.

    திதிகள் 15. முதல் திதி பிரதமை. பிரதமை என்றால் முதலிடம் வகிப்பது. ஒரு நாட்டின் முதல்வரை, "பிரதமர்' என்று சொல்வது இதனால் தான்.

    அடுத்தது துவிதியை. "துவி' என்றால், இரண்டு. "டூ' என்ற ஆங்கிலச்சொல் கூட, இதில் இருந்து பிறந்தது தான்.

    திரிதியை என்றால், மூன்று. இதில், திரி என்ற சொல் இருக்கிறது.

    அடுத்த திதியான சதுர்த்தியில், சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர்.

    அடுத்து பஞ்சமி: பாஞ்ச் என்றால், ஐந்து. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறுமுகம் இருக்கிறது.

    சப்தமியில் வரும் சப்தம் என்றால், ஏழு. கோவில்களில் ஏழு அம்பிகைகளைக் கொண்ட, சப்த கன்னியர் சன்னிதி இருக்கும்.

    அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர்.

    நவமி ஒன்பதாம் திதி. நவரத்தினம், நவக்கிரகம் எல்லாமே ஒன்பது தான்.

    தசமியில் உள்ள, தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். பத்து தலை உடையவன் என பொருள்.

    ஏகாதசி என்பதை, ஏகம் தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11-ம் திதி.

    இதுபோல துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பதையும் பிரித்து பொருள் பார்த்தால், 12,13,14 என வரும்.

    பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15-ம் திதியாகும். இவற்றில், தேய்பிறை சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமை சேர்ந்து வருமானால், அது கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி எனப்படும்.

    கிருஷ்ண என்றால், தேய்பிறை. அங்காரகன் என்றால், செவ்வாய். சில குடும்பங்களில் கொடிய பாவம் இருக்கும். இது வழிவழியாக வந்து நம்மை கஷ்டப்படுத்தும்.

    உதாரணத்துக்கு, ஏதோ ஒரு தலைமுறையில் இருந்த தாத்தா, தன் மனைவி, பிள்ளைகளை கைவிட்டிருப்பார். சிலர், கொலையே கூட செய்திருக்கலாம். சிலர், பெண்களை ஏமாற்றி கைவிட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் கையாடியிருக்கலாம்.

    இதனால், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம், எத்தனை தலைமுறையானாலும் தொடரும். அந்த குடும்பங்களிலுள்ள பெண்கள், கணவனை இழப்பதும், கைவிடப்படுவதும், ஆண்களால் ஏமாற்றப்படுவதும், அகால மரணம் அடைவதுமான சம்பவங்கள் தொடரும்.

    இவர்களின் பரம்பரை, வறுமையில் வாடும். ஒருவேளை, பணமிருந்தாலும் நிம்மதியின்றி வாழ்வர். இந்த தலைமுறை மட்டுமின்றி, எதிர்கால பரம்பரைக்கும் இந்த சாபம் தொடரும். இது மட்டுமல்ல சில குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும்.

    அந்த ஆத்மாக்கள் அமைதியின்றி அலையும்.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் நாளே, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. இந்நாளில், பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

    இதற்கென்று சில ஹோமங்கள் உள்ளன. அவற்றை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது.

    ஐப்பசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசியை, "நரக சதுர்த்தசி' என்கிறோம். அன்று தான் தீபாவளி கொண்டாட்டம். அதாவது, பாவம் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு அசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். இதில் இருந்து சதுர்த்தசி, பாவங்களை அழிக்கும் திதி என்பது உறுதியாகிறது.

    செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வந்து, அந்நாளில் இறை வழிபாட்டை மேற்கொள்வோமானால், ஒரு தலைமுறையின் பாவத்தையே அழித்து, எதிர்கால தலைமுறையை சுகமாக வாழ வைக்கிறது. இந்நாளில், அவரவர் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும்.

    புண்ணிய தலங்களான காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு சென்று புனித நீராடி, முந்தைய பாவங்கள் தீர, கடவுளை பிரார்த்தித்து வர வேண்டும்.பொதுவாக, மக்கள் செவ்வாய்கிழமையை ஒதுக்கித் தள்ளுவதுண்டு.

    ஆனால், அந்த கிழமை ஒரு தலைமுறையின் பாவத்தையே அழிக்கிறது என்றால், அதை சுபநாளாகத்தானே கொள்ள வேண்டும்.

    • மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
    • ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும்.

    பிரதோஷ விரத நாட்கள்

    பட்சங்கள் அதாவது மாதத்தில் வளர்பிறை நாட்கள் 15 தேய்பிறை நாட்கள் 15 ஆகும். வளர்பிறைநாட்கள் சுக்கில பட்சம் என்றும் தேய்பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும்.

    இந்த ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

    சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

    உதாரணமாக, விஜய வருடம் தை மாதம் 15ம் நாள் (28.01.2014) செவ்வாய் கிழமை துவாதசி திதி அன்று காலை 19 நாழிகை 14 வினாடியுடன் முடிந்து, அதன் பின்னர் திரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை புதன் கிழமை 10 நாழிகை 26 வினாடி வரை வியாபித்து இருப்பதால், முதல் நாள் செவ்வாய் கிழமை அன்றுதான் பிரதோஷம் எனக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் திரயோதசி திதி 26 நாழிகை முதல் 32 முடிய இருப்பது தை மாதம் 15ம் தேதி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்:

    தேய்பிறை சதுர்த்தசி திதி 45 நாழிகை இருக்கும் நாளைத்தான் மாத சிவராத்திரி நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

    மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.

    உதாரணமாக விஜய வருடம் தை மாதம் 16ம் நாள் (29.01.2014) புதன் கிழமை அன்று காலை 10.26 நாழிகையுடன் திரயோதசி திதி முடிவடைந்து அதன் பின்னர் பகல் முழுவதும் சதுர்த்தசி திதி இருப்பதால் அன்றுதான் மாத சிவராத்திரி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    கார்த்திகை தீப நிர்ணயம் செய்வது:

    கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி பிரதானமாகும். இந்த பௌர்ணமி , பிரதோஷ காலத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

    பாஞ்சராத்திர தீபம்:

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரதானமாகும். இந்த நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் வேதையாகக் கூடாது. அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்பரம் ஒரு வினாடியும் இருக்கக்கூடாது. இப்படி வேதை ஏற்பட்டால் மறுதினத்தில்தான் தீபரோகணம்.

    கோகுலாஷ்டமி:

    சிரவண (ஆவணி மாதம்) -பகுள அஷ்டமி - இந்த அஷ்டமி அர்த்தராத்திரியில் வியாபித்திருக்கும் தினம்தான் கோகுலாஷ்டமி.

    கிருஷ்ண ஜெயந்தி பகுள அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், ஹர்ஷநாம யோகமும், ரிஷப லக்னமும் சேர்ந்த நேரம்தான் கிருஷண் ஜெயந்தி ஆகும்.

    தீபாவளி நிர்ணயம்:

    ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும். இந்த சதுர்த்தசி திதி இரவு 4-வது ஜாமத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி.

    போதாயன அமாவாசை நிர்ணயம்:

    சதுர்த்தசி திதியன்று 4வது ஜாமத்தில் அமாவாசை தொடர்பு சிறிது நேரம் இருந்தாலும் அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.

    முகூர்த்த நாள் குறிக்கும்போது கவனிக்க வேண்டிய முகூர்த்த தோஷங்கள்:

    பூகம்பம் ஏற்பட்ட மாதம் தவிர்க்க வேண்டும்.

    மல மாதம் (இரண்டு பௌர்ணமி, இரண்டுஅமாவாசை வரும் மாதம்) தவிர்க்க வேண்டும்.

    கிரகண தோஷம் உடைய மாதங்கள், சந்திரன் 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் நாட்கள், பாபகிரகம் ஆட்சியற்று மற்ற ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலம், குருவும் சுக்கிரனும் சமசப்தம லக்கினங்களில் சஞ்சாரம் செய்யும் காலம், குரு சுக்கிரன் அஸ்தமன தினத்திற்கு முன், பின் 7 நாட்கள், குரு, சுக்கிரன் லக்கினமானபோது முன், பின் 3 நாட்கள், சாயன்ன காலம் (24 முதல் 30 நாழிகை வரை) அன்றைய தினம் சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக்கொண்டால், அந்த 6 மணியை கூட்டிகொள்ளக் கிடைப்பது 15.36 மணி முதல் 18.00 மணி வரை, கரணங்களில் பவம், பாலவம், கரசை, பத்திரை நீக்கிய கரணங்கள், இஷ்டி தோஷம், இருத்தை, அஷ்டமி, இலாபம், ஏற்காளம், யோகங்களில் வைத்திருதி யோகம்,வியாதிபாத யோக பிற்பாதி ஆகுலம் முதலானவை முகூர்த்த தோஷம் உள்ளவையாகும். இவை முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய காலங்கள் ஆகும்.

    சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி?

    ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

    ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும். இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.

    ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது. மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.

    ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.

    திதித்துவம்:

    மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர்.

    சூனிய திதி என்றால் என்ன?

    ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும்.

    • சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.
    • பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

    திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்

    தேசத்தில் தீமையது செய்வோனாவான்

    அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்

    அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்

    பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்

    பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்

    சூரியவே குரோதமது வுடையோனாகி

    குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.

    - அகத்தியர்.

    சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும், அடுத்தவர்களிடம் கலகம் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும், அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

    கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்

    குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்

    நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்

    நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்

    அன்றேல் களங்கமது யுற்றோனாகும்

    உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்

    பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்

    மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.

    - அகத்தியர்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசை செய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.

    இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

    ×