search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ - நாம் திட்டம்"

    • உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
    • விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு மையத்திற்கும் குறைவான கொள்முதல் இலக்கு வழங்கப்பட்டதால் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) திட்டத்தின் கீழ் வாரம்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    இது குறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. இ - நாம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் தேசிய அளவிலான வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பங்கேற்கலாம். விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தரம் வாரியாக ஏலம் விடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். விவசாயிகள், வியாபாரிகள் வருகையைப்பொறுத்து ஏல நாட்கள் அதிகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×