search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித ஜோசப் கல்லூரி"

    • பேரணிக்கு கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார்.
    • பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கடையம் போலீசாரும் இணைந்து உலக போதை பொருள் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குளோரி தேவ ஞானம் வாழ்த்தி பேசினார்.

    கடையம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் ஊரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதில் கடையம் பெரும்பத்து தொழில் அதிபர் பரமசிவன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×