என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருஞ்சிறுத்தை"

    • கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவு
    • மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    ஊட்டி,

    கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ் சிறுத்தை, புலி, காட்டு யானைகள், மான்கள், காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் அவற்றின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலைக்கு அருகே கார்சிலி பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கருஞ்சிறுத்தை மற்றும் முதுகில் 2 குட்டிகளை சுமந்து செல்லும் தாய்க்கரடி உள்ளிட்டவை உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த காட்சிகள் அங்குள்ள தனியார் தொழிற்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் குறித்த செய்தி வெளியே பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளில் திரியும் வன விலங்குகள் தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் மிளிதேன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.

    குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக அந்த கருஞ்சிறுத்தை நடமாடுகிறது. சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து பின்பு வெளியே செல்லும் காட்சிகளும், சாலையில் அமர்ந்து நோட்டமிடும் காட்சிகளும் காமிராவில் பதிவாகி தற்போது அவை வலைதளங்களில் பரவி வருகின்றன.

    கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் மிளிதேன் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் மாலை நேரங்களில் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்ப முடியவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பினால் சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

    எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

    • காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது.
    • வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நயாகர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அரிய வகையான மெலனிஸ்டிக் இனத்தை சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் காணப்படுவதாக வன அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    முதன்மை தலைமை வன பாதுகாவலரான பிரேம்குமார்ஜா என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் அடர்ந்த காடுகளில் செல்லும் காட்சிகள் உள்ளது.

    காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், எங்கள் வனப்பிரிவில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் உள்ளன.


    பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக மெலனிஸ்டிக் மற்றும் பிற சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த வகை சிறுத்தைகள் பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கிறது. இவை சுற்றுச்சுழலுக்கு இனியமையாதவை என பதிவிட்டுள்ளார்.



    ×