என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச காற்றாடி திருவிழா"
- 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது.
- 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அழகிய கடற்கரையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையும் ஒன்று.
இந்த கடற்கரையில் வரும் 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடக்கிறது.
இதற்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி வரையிலான 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளது. புதுவையில் பிரம்மாண்டமாக சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து காற்றாடி திருவிழா முதல்முறையாக நடத்தப்படுகிறது.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. 12 வயதுக்கு மேற்பட்ட காற்றாடி விரும்பிகள் ரூ.100 செலுத்தி பங்கேற்க வேண்டும்.
- தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
- வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
மாமல்லபுரம்:
சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்டு மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இரண்டாவது ஆண்டாக இந்த திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
காற்றாடித் திருவிழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
வெளிநாடுகளில் டிராகன், யானை, குதிரை போன்ற உருவங்கள், கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட காற்றாடிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல வண்ணங்களில் 4 நாட்கள் காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது.
3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் மாமல்லபுரத்தில் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்