search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை தொகை"

    • கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை.
    • கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்தும் பலனில்லை என்றும், அலைகழிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் உரிமைத்தொகை குறித்து அதிகாரிகளிடம் இருந்து நடந்து எந்த முறையான பதிலும் வராததாலும், உரிமைத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறுத்து நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.
    • பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மானாமதுரை

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ் செய்தியை வைத்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஏற்கனவே விண்ணப் பிக்காதர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் ஏராளமான பெண்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங் குள்ள இ-சேவை மையத் தில் தங்களது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளித்தனர். அப்போது அலுவலர்கள் அந்த மேல் முறையீடு செய்பவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தபோது அவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இ-சேவை மைய அலுவலர்களும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் குழப்பம் அடைந்தனர்.

    இதே குழப்பத்தின் காரணமாக இளையான்குடி தாலுகாவிலும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின்னரும் இணையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் உள்ளதால் மீண்டும் பரிசீலனை ஏற்கப்பட்டு தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா? அல்லது கட்டாயம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்தில் பெண்கள் தவித்து வருகின்றனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டா லின் தேர்தல் வாக்குறுதிப்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழ ங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது ஏழை, எளிய பெண்கள், உழை க்கும் இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் பெண்கள் பயனடைகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வரவி ல்லை. மகளிர் உரிமை தொகை கிடைக்கா தவர்கள் குழப்ப மடைந்து ள்ளனர். தகுதி யானவர்களுக்கு கிடைக்கா ததால் பீதியடைந்துள்ளனர். இவர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கு குறித்து வி பரம் கேட்கும் நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கூட்டம் கூடு கிறது. தொ கை கிடைக்கா தவர்கள் இன்று முதல் ஒரு மாதத்தி ற்குள் மேல் முறையீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    மேல் முறையீட்டில் தகுதி உள்ள விண்ணப்ப ங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு உரிமை தொகை வழங்க வேண்டும். தொழி லாளர் நல வாரியத்தில் சேர்ந்தவர்கள், விதவை பென்சன் வாங்கு பவர்க ளின் விண்ணப்ப ங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தொகை பெற விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் சமூக நீதி காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தொடங்கி வைக்கிறார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலா ளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கி றார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பி னர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    அதே போன்று நாளை 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் அமைச்சரின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் அண்ணாவின் சிலை, திருவுருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க வேண்டும்.

    திமுக தோன்றிய செப்டம்பர் 17-ந் தேதி பவள விழாவை கொண்டாடும் விதமாக கட்சி கொடி ஏற்றி அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
    • திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்ய 3 கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்டன.

    சென்னையில் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2 கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,727 சிறப்பு முகாம்கள் மூலம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

    ஏற்கனவே வேறு திட்டங்களில் பயன்பெறக் கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தமுள்ள 1428 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    பெறப்பட்ட விண்ணப்பங்களில் முறையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்காமல் இருந்த குடும்ப தலைவிகள் வீடுகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

    பெறப்பட்ட மனுக்களில் எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல் சந்தேகமாக இருந்த, உரிய தகவல் இல்லாத விண்ணப்பதாரர்களின் வீடுகளில் மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

    விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் நடக்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத் திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர்.

    • வீடு வீடாகச் சென்று நேரடியாக களப்பணி

    பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியானகுப்பம் மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் மற்றும் கேத்தாண்டப்பட்டி, ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பம் படிவத்தில் வழங்கியுள்ள தகவல்களை சரிபார்க்கும் பணியை வீடு வீடாகச் சென்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் குறிப்பிட்ட தகவல்கள் உண்மைதானா என குறித்து நேரடியாக களப்பணி நடைப்பெற்று வருகிறது.

    இதனை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடிரென பார்வையிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

    • நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

    மேலும் இந்த இரு கட்டங்களிலும் ஏதேனும் ஒரு காரணத்தால் பதிவேற்றம் செய்ய இயலாமல் விடுபட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நாளை வெள்ளிக்கிழமை முதல் 20-ந்தேதி வரை 3 நாட்களில் ஏற்கனவே மனுக்களை பெற்று பதிவேற்றம் நடைபெற்ற மையங்களிலேயே மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் தற்போது முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

    மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

    இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கமுதி அருகே மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் நடந்தது.
    • 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாம், மண்டல பொறுப்பாளர் உதய லட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி, துணைத் தலைவர் மைதீன்,ஊராட்சி செயலர் முத்துராமு ஆகியோர் முன்னிலையில்,தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வி, முத்துபாப்பாத்தி ஆகியோர் மகளிர் உரிமைத் தொகை க்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர்.

    இதேபோல் கமுதி பகுதியில் 2-ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகத்தில், வருவாய் ஆய்வாளரும், மண்டல பொறுப்பாளருமான மணிவல்லபன் முன்னிலையில் நடை பெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அளித்தனர்.தன்னார்வலர்கள் இதைப் பெற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 51 மையங்கள் மூலமாக இருந்து 18,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    தமிழகம் முழுவதும் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவேரி‌பட்டணத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
    • மகளிருக்கான உரிமை தொகை வழங்க தற்போது ரேசன் கடைகளில் விண்ணப்படிவத்தை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    காவேரிப்பட்டினம்,

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சி 2-வது வார்டு கோவிந்தப்ப முதலியார் தெருவில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மற்றும் பதிவு ரசீதுக்கான டோக்கன்களை மகளிர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கிளைச் செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சூளகிரியில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெண்களுக்கு வீடு, வீடாக அரசு ஊழியர்க்ள விநியோகம் செய்து வருகின்றனர்.

    சூளகிரி, ஜூலை.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மாதிரி முன்னோட்ட விண்ணப்ப பதிவு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாயவிலைக்கடைகளில் உள்ள 5,64,624 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக நாளை வரை தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    2-ம் கட்டமாக பதிவு செய்யும் நபர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், மேற்படி ஒப்புதல் ரசீதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் என்ன தேதியில் எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்ற விவரம்ப திவு செய்யப்பட்டிருக்கும். மேற்படி விவரம் தினந்தோறும் விற்பனை–யாளரால் விளம்பரப் பலகையில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் (குடும்பத்தலைவி மட்டும்) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமிற்கும் ஒரு முகாம் பொறுப்பு அலுவலர், ஒரு காவலர், ஒரு உதவி மைய தன்னார்வலர்கள் அலுவலர், ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பதிவாளர் வீதம் பணிய மர்த்தப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக 584 இடங்களில் 823 பதிவாளர்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை பதிவு செய்யப்பட உள்ளனர்.

    மாவட்ட அளவில் மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் 2-ம் கட்டமாக மீதமுள்ள 510 இடங்களில் 774 பதிவாளர்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை பதிவு செய்ய திட்டமி டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×