search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து"

    • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது
    • உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்த இருக்கிறது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த மாதம் 11-ந்தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.

    அப்போது, அனைத்து மனுதாரர்களும் தங்களுடைய எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூலை 27-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் மனுதாக்கல் செய்ய முடியாது என இறுதிக்கெடு விதித்தது. இந்த மனுக்களை தயார் செய்து விசாரணைக்கு தாக்கல் செய்யும் வகையில் மனுதாக்கல் செய்பவர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞரையும், அரசு சார்பில் ஒரு வழக்கறிஞரையும் நியமித்தது.

    இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று முதல் உச்சநீதிமன்ற வேலை நாட்களில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சஞ்சய் கிஷன் கவுல், சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவணங்களை ஜூலை 17-க்குள் சமர்பிக்க உத்தரவு
    • இரண்டு பேரை மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க அனுமதி

    மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதோடு இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஐந்து நீதிபகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கு பட்டியலிடாமல் இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று பட்டியலிடப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது.

    அப்போது ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்வலர் ரஷித் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    ×