search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் ரகளை"

    • வயதான நபர் ஒருவர் இது போல் பெண்கள் மது குடிப்பது நமது கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்றார்.
    • இளம் பெண்ணை அவரது காதலன் எவ்வளவு சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினாலும் தகராறு செய்தார்.

    தெலுங்கானா மாநிலம், நாகோல் அருகே பதுல்லாலா குடா தேசிய நெடுஞ்சாலைக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் வந்தார்.

    காரை சாலையோரைம் நிறுத்திய இளம் பெண்ணும் அவரது காதலனும் பீர் பாட்டிலை திறந்து குடித்தனர்.

    இளம்பெண் ஒருகையில் பீர் மற்றொரு கையில் சிகரெட் பிடித்தபடி சினிமா பாடல்களைப் பாடி அந்த வழியாக நடை பயிற்சி சென்றவர்களை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.

    நடைபயிற்சி சென்ற ஒரு சிலர் நமக்கு ஏன் வம்பு என கண்டும் காணாமல் சென்றனர். சில வயதானவர்கள் இது போல் பொது இடத்தில் மது குடித்து ரகளையில் ஈடுபடலாமா என தட்டி கேட்டனர். அதற்கு இளம்பெண் நீ மது குடிக்க வில்லையா? உன்னுடைய பிள்ளைகள் மது குடிப்பது இல்லையா. இதைக் கேட்க நீ யார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


    அப்போது நடைபயிற்சி சென்ற ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இருப்பினும் இளம்பெண் ஒரு கையில் பீர் பாட்டிலும் மறுகையில் சிகரெட் வைத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நிறுத்தவில்லை.

    இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அப்போது வயதான நபர் ஒருவர் இது போல் பெண்கள் மது குடிப்பது நமது கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்றார். நீங்கள் அந்த காலத்து ஆட்கள் இப்போது இருப்பது நவீன கலாசாரம் நாங்கள் இப்படித்தான்.

    நாங்கள் மது குடிப்பதால் உங்களது கலாசாரம் கெட்டுவிடும் என்றால் நீங்கள் கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டியது தானே. எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இளம் பெண்ணை அவரது காதலன் எவ்வளவு சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினாலும் தகராறு செய்தார். அப்போது இந்த நிகழ்வை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இளம்பெண் செருப்பு காலால் எட்டி உதைத்து கைகளால் தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நடைபாதையில் சென்றவர்கள் இளம் பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக காரில் தள்ளி விட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த இளம் பெண் தனது காரை எதிர் திசையில் அதிவேகத்தில் ஓட்டி சென்றார். இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணையும் அவரது காதலனையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார்
    • கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

    கடலூர்:

    கடலூரில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் சேலத்தில் இருந்து புதுவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் செம்மண்டலத்துக்கு வந்த போது 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவருக்கு கண்டக்டர் சீட்டு கொடுத்தார். ஆனால் அந்த பஸ் கடலூர் கலெக்டர் அலுவ லகத்தை தாண்டியதும் அந்த பெண் எதிர் சீட்டில் வாலிபருடன் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை வாங்கி பேசினார். போன் பேசி முடித்து அந்த பெண்ணி டம் செல்போனை கொடுத்து விட்டார் .அதற்கு பிறகு அவர் நீங்கள் என்ன காதல் ஜோடிகளா என்று கேட்டார் .நீங்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் உருப்பட மாட்டீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் இதற்கு பதிலாக இளம் பெண் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. குழந்தை உடன் வந்த இளம் பெண் அவர்கள் இருவரையும் பார்த்து நாகரிகம் அற்ற முறையில் ஆபாசமாக திட்ட தொடங்கி விட்டார்.

    இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர். அவரும் பஸ் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு இறங்கி விடுங்கள் என்றார். ஆனால் அந்த பெண் டிக்கெட் டை கண்டக்டரிடம் கொடு க்காமல் வாக்குவாதம் செய்தார். எனக்கு ரூ. 20 செலவானாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த இடத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டக்டர் கூறினார் ஆனாலும் அந்த பெண் கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

    இந்த பஸ் கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடி அருகே வந்தது. அப் போது அந்த பெண்ணிடம் மீண்டும் கண்டக்டர் இந்த இடத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்றார். ஆனாலும் அந்தப் பெண் மீண்டும் எதிர் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளம் பெண்ணை பார்த்து கடுமையாகஆபாச வார்த்தைகளால் பேசினார். இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆல்பேட்டை சோதனை சாவடி வந்ததும் ரகளை செய்த பெண்ணை கீழே இறங்குமாறு கூறினார். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். அப் பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கண்டக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் இறங்கவில்லை. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பணியிடம் நீங்களும் போலீஸ் தானே என்னை காப்பாற்றுங்கள் என்றார். அவர் எதுவும் ெசால்ல வில்லை. உடனடியாக ஒரு பயணி சோதனை சாவடியில் இருந்த ஒரு போலீசாரை அழைத்தார். அவரும் வந்தார் .அவரிடமும் அந்தப் பெண் தகராறு செய்தார். இந்த நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு செல்லுங்கள் என்று கண்டக்டரிடம் கூறினர்.

    இந்த நிலையில் பெண் போலீஸ் ஒருவர் வந்தார் அவரிடமும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரகளையில் ஈடுபட்ட பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண், பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது எல்லா பயணிகளும் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் கூறினா ர்கள். ஆனாலும் அந்த பெண் எதுவும் ஏற்றுக் கொ ள்ளா மல் ஏற்றுக்கொ ள்ளாமல் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். திடீரென பெண் போலீஸ் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அழகாக தூக்கி கீழே இறக்கி விட்டார். மேலும் அந்தப் பெண்ணிடம் வந்த குழந்தையும் இறக்கி விட்டார். அந்த பெண் போதையில் வந்தாரா இல்லை கஞ்சா அடித்து விட்டு வந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 10 நிமிடம் தாமதமாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    ×