search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலில் மயங்கி விழுந்து முதியவர் சாவு"

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • பிளாட்பாரத்தில் டாக்டருடன் ரெயில் நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    மேற்கு வங்காளம் மாநிலம், சோட்டோ மொல்லக்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிதாய் ஹெவுலி (வயது 70). இவர் மேற்கு வங்காளம் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஷாலிமரில் இருந்து ஈரோட்டிற்கு செல்ல முன் பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தார். ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார்பேட்டை அருகே வந்தபோது நிதாய் ஹெவுலி திடீரென மயங்கி கீேழ விழுந்தார்.

    இதனை பார்த்த சக பயணிகள் டிக்கெட் பரிசோதரிடம் கொடுத்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் டாக்டருடன் ரெயில் நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் முதியவரை இறக்கி பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இதனையடுத்து ரெயில்வே போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×