search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை"

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சின்ன பாலம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி ரேவதி (29). கடந்த 10-ந் தேதி தசரதன் வேலைக்கு சென்று இருந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியும் மகளையும் காணவில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.

    ×