என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைகளில் ஆய்வு"
- கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட நியமன அலுவலர் ராகவன் உத்தரவின் பேரில் பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஜெயசீலன் மற்றும் போலீசார் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.5000 வீதம் 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்தனர்.
- ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
- உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகு தியில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் எலிகளை கொள்ளும் மருந்துகளான எலி பேஸ்ட் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திருச்செங்கோடு நகராட்சி சுகாதார அலுவலர் வெங்க டாசலம் தலைமையில் சுகா தார அலுவலர் குழு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோல தடை செய்யப் பட்ட பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகர் பகுதியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர சிற்றுண்டி கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றும் முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வில் கழிவுகளை முறையற்று கையாளும் தற்காலிக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்