search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதய குறைபாடு"

    • பொன்ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர் சாதனை
    • நோயாளி கத்தியின்றி ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறந்தார். இந்த ஓட்டையை இருதய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என பல சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சதீஷ்குமார் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மரு.சரவணனை சந்தித்து மருத்துவ ஆலோ சனை பெற்றார். அவர் உணவுக்குழாயில் காமிரா அனுப்பி துல்லிய இருதய படம் எடுக்கும் அதி நவீன கருவி மூலம் ஆராய்ந்து பார்த்து இந்த ஓட்டையை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம் என்று தெரி வித்தார். பிறகு காலில் உள்ள ரத்த குழாயில் சிறு துளையிட்டு அதன்மூலம் ஒரு சாதனம் பொருத்தி இருதய ஓட்டையை நவீன சிகிச்சை மூலம் அடைத்து சாதனை படைத்தார். நோயாளி கத்தியின்றி, ரத்தமின்ற ஒரே நாளில் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

    ×