என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எக்ஸ்"
- புதிய சந்தா முறை விரைவில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் துவங்கப்பட இருக்கிறது.
- எக்ஸ் அக்கவுண்ட் செட்டப் செய்வதற்கு மொபைல் போன் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.
எக்ஸ் வலைதளத்தில் இருந்துவரும் பாட்/ஸ்பேம் (Bot/Spam) பிரச்சினையை எதிர்கொள்ள புதிதாக சந்தா முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சந்தா முறை நாட்-எ-பாட் (Not-A-Bot) என்று அழைக்கப்படுகிறது. புதிய சந்தா திட்டத்தின் கீழ் பயனர்கள் வருடத்திற்கு ஒரு முறை 1 டாலர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
புதிய சந்தா முறை விரைவில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் துவங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த சந்தா முறை கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய சந்தா திட்டம், ஏற்கனவே உள்ள எக்ஸ் பயனர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
Starting today, we're testing a new program (Not A Bot) in New Zealand and the Philippines. New, unverified accounts will be required to sign up for a $1 annual subscription to be able to post & interact with other posts. Within this test, existing users are not affected.This…
— Support (@Support) October 17, 2023
அதன்படி புதிதாக எக்ஸ் அக்கவுண்ட் செட்டப் செய்வதற்கு மொபைல் போன் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதைத் தொடர்ந்து சந்தா திட்டத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். வெப் வெர்ஷனில் பயனர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும், பதில் அளிப்பது, புக்மார்க் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.
- மஸ்க், 2022ல் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார்
- மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு விளம்பர நிறுவனங்கள் தயங்குகின்றன
அமெரிக்காவில் 2006ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும் வலைதளமான இதில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வார்த்தைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகள் என பல வடிவங்களில் பதிவிடலாம்.
உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம், 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அந்நிறுவனத்தை முன்னிறுத்த பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வரும் மஸ்க், அதன் பெயரை 'எக்ஸ்' என மாற்றினார்.
அவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ் நிறுவனத்தின் வருமானம், மாதாமாதம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு 55 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. விளம்பர நிறுவனங்கள் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் சிந்திப்பதால் விளம்பரங்களை தர தயங்குகின்றனர் என தெரிகிறது.
அமெரிக்காவில் பெறப்படும் விளம்பர வருமானம், 2021 டிசம்பரில் இருந்ததை விட 2022 டிசம்பரில் 78% குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை மொத்த விளம்பர வருமானம் ஆண்டுக்காண்டு 60 சதவீதம் குறைந்துள்ளது.
விளம்பர வருவாய் குறைந்து வருவதை ஓப்பு கொண்ட எலான் மஸ்க் ஒரு சில சமூக ஆர்வலர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
தற்போதைய தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோ எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பர நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் எக்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி விட்டதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து எக்ஸ் லாபம் ஈட்ட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
- வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
- போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதன்படி பயனர்கள் மொபைல் போன் நம்பர்கள் இல்லாமல் தங்களின் யூசர்நேம் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
Video & audio calls coming to X:- Works on iOS, Android, Mac & PC- No phone number needed- X is the effective global address book That set of factors is unique.
— Elon Musk (@elonmusk) August 31, 2023
முன்னதாக எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே - புதிய வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வசதிகளை பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் "ஸ்பேசஸ்" எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது.
- அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
- அதற்கு பதில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.
எலான் மஸ்க்-இன் எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனர்கள் மற்றவர்களை பிளாக் (Block) செய்வதற்கான வசதி விரைவில் நீக்கப்பட இருக்கிறது. எக்ஸ் தளத்தின் புதிய உரிமையாளர் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். ஒருவர் பிளாக் அல்லது அன்-மியூட் செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இந்த தகவலை தெரிவித்தார்.
"மெசேஜ்களில் வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, தனி அம்சமாக இருக்கும் பிளாக் நீக்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தில் எந்த அர்த்தமும் இல்லை," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் மற்ற அக்கவுன்ட்களுடன் எப்படி உரையாடுகின்றீர்கள் என்பதை சிறப்பாக கட்டுப்படுத்த பிளாக் அம்சம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட அக்கவுன்ட்கள் தங்களை தொடர்பு கொள்வது, டுவீட்களை பார்ப்பது மற்றும் ஃபாளோ செய்வது உள்ளிட்டவைகளை தடுக்க செய்கிறது. தளத்தில் தங்களை யாரேனும் தவறாக தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
எக்ஸ் தளத்தில் பயனர்கள் பிளாக் செய்வதற்கு பதிலாக, மியூட் (mute) அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பின் படி பயனர்கள் தொடர்ந்து அக்கவுன்ட்களை மியூட் செய்யவும், மெசேஜ்களில் பிளாக் செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
- எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்
செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.
இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.
உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.
இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.
இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-
தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.
இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-
நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.
இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.
- மஸ்க், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
- எக்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி பெறவில்லை என நகர நிர்வாகம் கூறியது
இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர்.
டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.
கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார்.
இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.
ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது.
மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.
இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.
இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.
- சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார்
- வருவாயை பெருக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும், 50% விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும், அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க், பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.
சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார். மேலும், "இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்" எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், X-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும், விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது.
மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
- X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்