என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவுடி பலி"
- படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சுஜாதா நகரை சேர்ந்தவர் ஜம்பங்கி சண்முகா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது ஹக்கும் பேட்டையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்றிருந்த ஜம்பங்கி சண்முகா நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினார்.
பின்னர் கோபால பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடினார். மது போதையில் இருந்த இருவரும் கத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது அறைக்கு வந்த ஓட்டல் ஊழியர் கத்தி கூச்சலிடக் கூடாது என கூறினார். இதில் ஆத்திரமடைந்த ஜம்பங்கி சண்முகா மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து விடுதி ஊழியரை தாக்கி வெளியே அனுப்பினர்.
அறையில் இருந்து வெளியே வந்த விடுதி ஊழியர் அறையை வெளிப்பக்கமாக தாழிட்டு பூட்டினார்.
விடுதி ஊழியர் கதவை வெளிப்பக்கமாக பூட்டியதால் போலீசில் புகார் செய்து விடுவார் என ஜம்பங்கி சண்முகா எண்ணினார்.
போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என எண்ணிய சம்பங்கி சண்முகா நடிகர் வடிவேலு பாணியில் அறையில் இருந்த பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி அதன் மூலம் வெளிப்புறமாக கீழே குதித்தார்.
ஆனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்