search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புதுறையினருக்கு தகவல்"

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள கொயாக்காமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    அப்போது விவசாய நிலத்தில் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தடியில் ஊர்ந்து சென்ற சுமார் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    ×