என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி மதுபாட்டில்"
- விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே ராணுவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் எக்பர்ட். இவர் மீது திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரிடம் விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வெளிமாநில மது பாட்டில்கள் வாங்கி வந்து அதில் தமிழ்நாடு அரசின் மதுபான ஸ்டிக்கரை போலியாக ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவாரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் முடிவில் ராணுவ நகரில் தங்கியிருந்த எக்பர்ட் மற்றும் தினேஷ் ஆகியோரிடமிருந்து 618 போலீ ஸ்டிக்கர் ஓட்டிய மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ், கலையரசன், சுதா, கலையரசி, தருணாச்சா உள்பட 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்