search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடைகள் விலகும்"

    • பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
    • `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.

    விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

    எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.

    நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.

    வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.

    இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.

    • வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
    • மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். இந்த பூஜை விரதம் இருந்து செய்வது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.

    இதற்கு நமக்கு 11 அகல் விளக்குகள் தேவை. இதற்கு புதிதாக வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் பழைய அகலையே கூட தேய்த்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளலாம். அடுத்து 11 அரச இலை அல்லது வெற்றிலை இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    அதேபோல் விநாயகருக்கு பிடித்தமான நைவேதியம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கான நேரமும் மிகவும் முக்கியம். இதை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, அல்லது 8.15-ல் இருந்து 9.15 வரையும், காலை 10.45 முதல் 11.45 வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 வரையும் இந்த நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த பூஜை செய்து கொள்ளுங்கள்.

    இந்த பூஜை செய்ய நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 இலையும் 11 அகல் விளக்கையும் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல அனைத்து அகலையும் வெற்றிலை அல்லது அரச இலை மேல் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைத்து விடுங்கள்.

    வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு பிடித்த நைவேதியத்தை வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் என சகலமும் வைத்து பூஜையை உங்களால் முடிந்த வரையில் சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

    ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திஹி ப்ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை செய்யும் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.

    • குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
    • சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.

    இன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது தோஷம், சந்திர தோஷம் நீங்கும்.

    சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய அருள் வளர்ந்தது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபடலாம்.

    விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.

    "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண

    கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல

    சித்திகராய ஸர்வஜன வசீகரணாய

    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்

    கணபதயே ஸ்வாஹா."

    இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது என எந்த சுப காரியம் தொடங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து சுபகாரியங்கள் நிகழும்.

    ×