என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவிகள் அவதி"
- தருமபுரி அருகே போதிய கழிப்பறை வசதியின்றி பள்ளி மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
- மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கின்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மண அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகும்பு வரை சுற்று பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த சுமார் 260 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த போதிய பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க படாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் மாணவ, மாணவிகள் கழிப்பிடம் செல்லும் பகுதியில் சுகாதார மற்ற முறையில் புதர் மண்டி இருக்கும் நிலையில் விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கீன்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.பள்ளியில் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யபடாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் கிராமப் பகுதி மாணவ, மாணவியர் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர்.
- மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், , சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாரண்டப்பள்ளி , கருங்கள், மைதாண்ட பள்ளி, சுழல் தின்னை மற்றும் கூட்டூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 -க்கும் மேற்பட்ட குடியி ருப்பபுகள் உள்ளன.
இங்கு 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாய பொருட்களை விற்பனை செய்யவும், வெளியூர்களுக்கு சென்று தொழிற்சாலையில் பணிபுரிவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சூளகிரி, ஒசூர், பெங்களுர், என பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் போதிய பேருந்து வசதியில்லாததால் கிராமங்களில் உள்ள டெம்போ , ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் சூளகிரியில் இருந்து மைதாண்டப்பள்ளி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர்.இதனால் மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாரண்ட பள்ளி முதல் மைதாண்டப்பள்ளி வரையிலான தார்சாலை மிக மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளதால் அதனை சீர்படுத்தி, சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து மைதாண்டப்பள்ளி வரையிலான பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்