search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக நீதி நாள்"

    • பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.
    • கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.

    பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

    அன்றைய தினம், சமத்துவம் சகோதரத்துவம். சமதர்ம கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்' என உறுதிமொழி ஏற்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.

    இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு" தலைமைக் கழகம் அறிவிப்பு "தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி"

    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனது என்ற பண்பு நெறியும் வாழ்வியல் சுடைபிடிப்பேன்!
    • வழிமுறையாகச் சுயமரியாதை பகுத்தறிவு ஆளுமைத்திறனும் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
    • சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
    • மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
    • சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    சமூக நீதி நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கினார்.

    இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

    • போலீசார் ஏற்றுக்கொண்டனர்
    • குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    ×