search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு விழா"

    • அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங் கினார்.
    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தருமபுரி,

    2023- 2024 ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது;-

    2023-2024ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களா கிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதா னிய திருவிழா இன்று தருமபுரி மாவட் டத்தில் கொண்டாடப்படுகிறது.

    மேலும் சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்பு ணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புக ளுடன் நுகர்வோ ராகிய பொது மக்களின் பார்வைக்கு வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்க ளை கொண்டு விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நம் முன்னோர்களால் ஆதிகாலத்திலிருந்தே உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்ப வை சிறுதானிய வகைக ளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவேஇந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களி டையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மா னத்தை ஒரு மனதாக ஆதரித்ததால் 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்க ளுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

    உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைக ளைப் பயன்படுத்தும் நாம்சிறுதானிய உணவு களை உண்பதைக் காலப் போக்கில் மறந்துவிட் டோம். ஆரோக்கி யத்தைப் பேணுவதற்குத் தேவை யான அனைத்து சத்துக்க ளும் சிறுதானி யங்களில் உள்ளது. சிறுதானியங்க ளில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படு வதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

    சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்து வக் குணம் கொண்ட நுண் ணுயிர் எதிர்ப்பு வேதிப் பொருட்களும் ஆக்சிஜ னேற்ற எதிர்ப் பொருட்க ளும் உள்ளன. சிறுதானி யங்களில் உள்ள கிளை சிமிக் இன் டெக்ஸ் சர்க்க ரை நோயாளிக ளுக்குச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலு வலர் செ.பால்பி ரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணி பக் கழக மண்டல மேலாளார் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சு.இராமதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் பெ.சுப்பரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    சேலம்:

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், புதுமணத் தம்பதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக கர்ப்பிணிகள், குழந்தை பிரசவித்த தாய்மார்கள், வளரிளம் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், இணை உணவுகள் குறித்தும் ஊட்டச்சத்து உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், புதுமணத் தம்பதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×