search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைபராமரிப்பு"

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது.
    • அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல.

    இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது. இது அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல. காது குத்துவதற்கு பின்னால் நிரூபிக்கப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளன.

    குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது. மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவும். அவ்வாறு காது குத்துவதற்கு முன்பு பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசிகள் முழுவதுமாக போட்ட பிறகுதான் காதுகுத்த வேண்டும். எனவே 1 முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு காது குத்துவது சரியானது. அதிக எடை கொண்ட காதணிகளைக் காட்டிலும், மெல்லிய, லேசான காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

    காது குத்துவதற்கு முன்பு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது காதுகளில் துளையிட வேண்டாம். காது குத்தும்போது. குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப குழந்தைக்கு பிடித்த பொம்மைகளைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லவும். காது குத்துவதற்கு முன்னர் துளையிடும் இடத்தை ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் தோல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    இதன்மூலம் கிருமித்தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொண்டு துளையிடுவது நல்லது, துளையிட பயன்படுத்தும் ஊசி அல்லது எந்திரத்தின் சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே காதில் துளையிட வேண்டும்.

    காது குத்திய உடன் தங்கம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி காதணிகளை அணிவிப்பது நல்லது.

    இந்த வகை உலோகங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தங்கம் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட, நிக்கல் கலக்காத உலோக காதணிகளை அணிவிக்கலாம். தொங்கும் வகையிலான காதணிகளை அணிவிப்பதைவிட, காதோடு ஒட்டி இருக்கும்படியான காதணிகளை அணிவித்தால் குழந்தைகள் இலகுவாக உணருவார்கள்.

    இறுக்கமான காதணிகள் அணிவிப் பதையும் தவிர்க்க வேண்டும். காது குத்திய பின்பு ஒருசில நாட்கள் வரை, துளையிட்ட பகுதி சிவந்து காணப்படும். துளையிடப்பட்ட இடத்தில் இருந்து சீழ் அல்லது திரவம் வெளியேறினால். தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாக சிறிய கொப்புளங்கள் அல்லது துளையிடப்பட்ட பகுதிக்கு அருகில் பெரிய கொப்புளம் ஏற்படும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதன் மூலமும் தொற்று வெளிப்படும். காது குத்தப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும். அவ்வாறு காய்ச்சலோ, நோய்த்தொற்றோ இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

    காது குத்திய பிறகு துளையிட்ட பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமிநாசினியைப் பூசவும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ள சோப்பு கொண்டு காதுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் கழுவவும். காயம் குணமாகும் வரை குழந்தைகளுக்கு பொத்தான்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்துங்கள். இதனால் ஆடையை தலைக்கு மேல் இழுக்காமல் கழற்ற முடியும். ஆடை காதுகளில் பட்டு குழந்தைக்கு வலி உண்டாவதை தடுக்கவும் முடியும்.

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
    • குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.

    பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.

    மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.

    குளிர்கால தொற்றுகள்

    குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.

    ஜலதோஷம்

    குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சுவாசக்குழாய் தொற்று

    குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.

    நோரோ வைரஸ்

    இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    • பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும்.
    • பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது.

    பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. தந்தை மீது எப்போதுமே பெண் குழந்தைகள் அதிக பாசத்தை காண்பிப்பார்கள். பெண் குழந்தைகள் தந்தையின் ஆயுள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போலந்தில் உள்ள ஜெகில்லோனியன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலத்தில் சுமார் 74 வாரங்கள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அந்த வீட்டு தந்தையின் ஆயுளும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.

    இதற்கு எதிர்மாறாக தாயின் ஆயுட்காலம் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் மகன் அல்லது மகள், அல்லது இருவரும் இருந்தால் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறார்கள். அவரது ஆயுளையும் குறைக்கிறார்கள். சராசரியாக தாயின் ஆயுட்காலம் 95 வாரங்கள் குறையும் என்கிறது அந்த ஆய்வு.

    • முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.
    • இறப்பு விகிதத்தை குறைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி பச்சிளம் குழந்தைகள் (சிசு) பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதும், அவர்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்முதலில் ஐரோப்பா தொடங்கியது.

    பிரசவத்திற்குப் பிறகு, போதுமான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பிறந்த முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல தொடர்பை உருவாக்குகிறார்கள். மேலும் குழந்தையின் செவிப்புலன், பார்வை, கை, கால்கள் மற்றும் தகவல் தொடர்பு மேம்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த மாதங்கள் மிகவும் முக்கியமானது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பச்சிளம் குழந்தை இறப்பு அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு இந்தியாவில் 7 லட்சத்து 21 ஆயிரம், குழந்தைகள் இறந்ததாக கண்டறிந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு உலகளவில் பிறந்த முதல் மாதத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, தற்போது குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 100-ல்இருந்து ௧௦ ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு சிசு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக `ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் உரிமையை உறுதி செய்தல்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நாட்டின் எதிர் காலம். அவர்களுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவது ஒவ்வொருவருடைய கடமை.

    • மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
    • மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர்.

    தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு.

    இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம். உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

    அம்மாக்களின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்சினைகளை சந்திக்கும்போது தற்கொலை முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இளம்வயதினரின் தற்கொலை முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது தாய்மார்களின் எண்ணங்களை சார்ந்தது.

    தற்கொலை எண்ணங்களுக்கு மரபியல் அல்லது பிற காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பெரும்பாலாக இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் இளைஞர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள்.

    இந்தியாவை பொறுத்தவரை ஒரு நாளில் 36 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் 13 வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணங்களுக்கு பெற்றோர்களின் மனநிலை காரணமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

    தற்கொலை எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது?

    * சில குழந்தைகள் சிறு விஷயத்திற்கு கூட கோபப்படுவது, காரணமே இல்லாமல் கோபமாக இருப்பது, எதற்கெடுத்தாலும் எரிந்து

    விழுவது என்று அவர்கள் காணப்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.

    * முடிவெடுக்க முடியாமல் திணறுவது, குழம்பிப்போவது போன்ற காரணங்களாலும் ஏற்படும்.

    * முன்யோசனையின்றி முடிவுகளை எடுப்பது, ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பே அதன் முடிவை கணித்து வருந்துவது.

    * எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளத்தெரியாது.

    * குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்துகொண்டால் அதாவது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ முறைகேடாக நடந்துகொண்டாலும் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளும் அதாவது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்திருந்தால் அதில் இருந்து மீண்டுவரமுடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் மற்றும் தாய்-தந்தை கருத்துவேறுபாடு, பிரிதல் போன்றவையும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    * படிப்பில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது படிப்பு விஷயத்தில் ஆர்வமின்மை. அதனால் ஏற்படும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட தற்கொலை எண்ணத்துக்கு வழிவகுக்கின்றன.

    இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் தற்கொலைகளுக்கு கல்வி சார்ந்த தோல்வி பயம், காதல் தோல்வி போன்றவை தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன. சில சமயங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கூட காத்திராமல் தற்கொலை செய்து கொள்வது போன்ற மிகவும் வேதனையான செயல்களும் நிகழ்வதுண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் தற்கொலைப் பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாகவும் தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    மனச்சோர்வினால் தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும். மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தோள் சாய. தோள் தந்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.




    • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

    பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

    இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

    வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

    குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

    பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

    நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

    கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

    • குழந்தை பிறந்து 3 வாரங்களில் கோலிக் வலி தொடங்கும்.
    • குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    கோலிக் என்பது வயிற்றில் உண்டாகி இருக்கும் வலியினாலோ அல்லது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அசவுகரியத்தினாலோ ஏற்படும் வலியினால் அழும் கைக்குழந்தைகளை தேற்ற முடியாமல் இருக்கும் நிலையே இந்த கோலிக் ஆகும். குழந்தை ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் மேலாகவும் ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால் அது கோலிக் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    குழந்தை கோலிக் அதாவது பெருங்குடல் வலி கொண்டிருந்தால் அவர்களை எளிதில் சமாதானம் செய்ய முடியாது. இந்த கோலிக் நோய் குழந்தைகளை பாதிக்கும் போது அறிகுறிகள் எப்படி இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும். அதற்கான வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தை பிறந்து 3 வாரங்களில் தொடங்கும் இந்த வலியானது குழந்தைக்கு 4 முதல் 6 மாதங்கள் ஆகும் போது மறைந்துவிடும். பெரும்பாலும் வாயு அல்லது அஜீரணம் போன்றவை பொதுவான தூண்டுதலாக இருந்தாலும் இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.

    அறிகுறிகள்:

    * குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    * வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு அழுதல்

    * தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இருந்தால் இது கோலிக் நோய் தான்.

    இந்தநிலையில் குழந்தைகள் முதுகை வளைத்து, முஷ்டிகளை இறுக்கி, வயிற்று தசைகளை இறுக்கி, அழும் போது தங்கள் கைகளையும் முழங்கால்களையும் வயிற்றை நோக்கி வளைப்பார்கள். இந்த அறிகுறிகளை கண்டால் அதற்கு காரணம் இந்த பெருங்குடல் வலியாக இருக்கலாம்.

    கோலிக் வலியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கமான எண்ணெய் மசாஜ்கள் பல நன்மைகளை செய்யும். மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையை சூடாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் செரிமானத்தை உறுதி செய்யவும் செய்கிறது. வாயுவை தடுக்கவும் செய்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு நன்றாக தூங்குவார்கள். குழந்தையின் கோலிக் வலி குறைய மசாஜ் சிகிச்சையின் போது தேங்காய் எண்ணெய் போதுமானது.

    எப்படி செய்வது

    ஆலிவ் எண்ணெய் சில துளிகள் சேர்த்து அதில் சில துளி லாவெண்டர் எண்ணெய் கலந்து குழந்தையின் வயிற்றை கடிகார திசையில் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குழந்தையின் விலா எலும்பு, இடுப்பு, கைகள் மற்றும் கால்களை சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு பல முறை இதை செய்ய வேண்டும்.

    குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் கால்களை எடுத்து அவர்களது அடிவயிற்றில் மென்மையாக வையுங்கள். கால்களை சைக்கிள் சுழற்சி போன்று கால்களை சுழற்றலாம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் அல்லது ஒவ்வொரு காலையும் மாறி மாறி செய்யலாம். மென்மையாக இதை செய்ய வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் வாயு தேங்கியிருந்தால் இதன் மூலம் வெளியேற உதவும்.

    கைக்குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு குழந்தையை தூக்கி மார்பில் படுக்க வைத்து முதுகுப்பகுதியை மெதுவாக தட்டி கொடுங்கள். இதன் மூலம் குழந்தை ஏப்பம் வெளியேற செய்யும். குழந்தை பாலை வெளியேற்றாது.

    தாய்ப்பால் கொடுக்க கூடிய கைக்குழந்தைகளுக்கு இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் பெருங்குடல் வலி அதாவது கோலிக் நோயில் இருந்து வேகமாக விடுபட முடியும்.

    • திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கிவிட்டது.
    • குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள்

    திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும் போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ், அவருடன் ஒரு சந்திப்பு.

    நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

    எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்கு சென்றேன்.

    அங்கு எனது கண்முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் சிறப்பு குழந்தைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.

    இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது `சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை' என்றார்கள். இந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன்.

    அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்த துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில் பேசுவதில் பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும் அந்த குறையாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம் தான்.

    ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது அந்த சால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது. குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள் இந்த அன்புதான் என்னை தொடர்த்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயப்பாடுகளுக்காக புதுமைப்பெண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்" என்றார்.

    ×