search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார்"

    • படிகட்டில் இறங்க முயன்றபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயம் அடுத்த கோமட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    ரமேஷ் இன்று காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, தான் வேலை செய்யும் அதே பஸ்சில் பயணம் செய்தார்.

    வீட்டின் அருகே சென்றதும் அவர் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×