என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூளை அழற்சி நோய்"
- லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரையன்னா சேர்க்கப்பட்டார்
- டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது
அமெரிக்காவில் வசித்து வரும் கிறிஸ்டல் பாட்லி எனும் பெண்ணின் மகள், 6 வயதான பிரையன்னா பாட்லி (Brianna Bodley).
விளையாட்டு, கல்வி என உற்சாகமாக இருந்த பிரையன்னாவிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அச்சிறுமியின் கல்வி தடைபட ஆரம்பித்தது. மேலும் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. நடக்க முடியாத வகையில் அவள் கால்கள் மடங்கி கொள்ளும்.
கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு "ராஸ்முஸ்ஸென்'ஸ் என்சஃபலைட்டிஸ்" (Rasmussen's Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படடது. இதனால் அவள் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. அவளுக்கு வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளும் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவள் நிலை சீரடையவில்லை. கடந்த ஜனவரி மாதம் அவள் நிலைமை மோசமடைய தொடங்கியது.
அரியவகை நோயான இதற்கு சிகிச்சையாக ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதுதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த மருத்துவமனையின் டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் பல துறை மருத்துவர்களும் பங்கேற்றனர்.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சிகிச்சைக்கு பிறகு அச்சிறுமி தற்போது நலமாக தேறி வருகிறார்.
பல வருடங்களுக்கு முன், இதே நோய்க்கு அழற்சி ஏற்பட்ட மூளையின் ஒரு பகுதியையே நீக்குவது மட்டும்தான் சிகிச்சை முறையாக இருந்து வந்தது. தற்போது மருத்துவர்களின் திறமையாலும் மருத்துவ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாலும் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்த முடிவதால் இது ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக மருத்துவ உலகில் பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்