search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 சதவீத இட ஒதுக்கீடு"

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொது த்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.

    இணையதளத்தில் விண்ணப்பம்

    40 வயதுக்குட்பட்ட வர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறு வதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து இணையதள முகவரி மூலமாகவோ அல்லது நேரு விளையாட்டு அரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசு விளையாட்டுத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 40-வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். சர்வதேச போட்டிகளில் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற் றவர்கள்), தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற www. sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான வீரர், வீராங்கனைகள் விண்ணப் பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விவர இணைப்புகளுடன் வரும் 31-ம் தேதிக்குள், இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் அளிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    ×