search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசி காரணமாக மான் குட்டி இறந்திருக்கலாம்"

    • வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (53). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கிணற்றில் மான் குட்டி ஒன்று தவறி விழுந்து

    உயிரிழந்துள்ளதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, வாணியம்பாடி வனவர் வெங்கடேசன் தலைமையில், வனக் காப்பாளர்கள் நாகராஜ், அரவிந்தன், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் மான் குட்டியை மீட்டனர்.

    பசி காரணமாக மான் குட்டி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். இறந்த மான்குட்டி உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

    ×