search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் நியமனம்"

    • 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை இருந்தார்.
    • விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஜார்க்கண்ட், தெலுங்கானா கவர்னரான சி.பி.ராதா கிருஷ்ணன், புதுச்சேரிக்கும் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு முதல் புதுச்சேரிக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு கவர்னர்கள் தான் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதேபோல கேரளா கவர்னர் ஆரீப்முகமதுகான் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    இதோடு புதுச்சேரிக்கும் தனியாக நிரந்தர கவர்னரை நியமிக்கலாமா? எனவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏனெனில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர்கள்தான் புதுச்சேரியை நிர்வகித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    • மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
    • ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார்.

    புதுடெல்லி:

    திரிபுரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

    திரிபுரா கவர்னராக இந்திரசேனா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்துக்கு ரகுபத் தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இந்திர சேனா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக அவர் இருந்து வந்தார்.

    தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி செயலாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.

    மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார். 68 வயதாகும் அவர் பா.ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவரை தேசிய அரசியலில் இருந்து கவர்னர் பதவிக்கு பா.ஜனதா மாற்றி உள்ளது.

    புதிய கவர்னர்கள் இருவரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×