search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து பாதிப்பின்றி விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர்"

    • சாலை ஓர பாறை மீது வேன் மோதி 2 பேர் காயம்
    • போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் உழவர்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிறுவனம் உள்ளது.

    இங்கிருந்து 50 கிலோ விதம் 40 மூட்டை சாமையை கொள்முதல் செய்து திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிக்கொண்டு மதியம் ஏலகிரி மலையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

    ஏலகிரி மலையில் உள்ள 5-வது வளைவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரெனவேன் பிரேக் பிடிக்கவில்லை. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் திருவண்ணா மலை மாவட்டம் பெரும்பா க்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் திருமலை (28) என்பவர் சாலையின் அருகே உள்ள பாறை மீது மோதி சாதுரியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் திருமலை மற்றும் கிளினராக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமு (31) ஆகிய இருவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைகளில் போக்குவரத்து பாதிப்பின்றி விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×