search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏராளமான போட்டிகள் நடைபெற்றது"

    • 3 நாட்களாக நடைபெற்றது
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அளவிலான தமிழக அரசின் கலைத்திருவிழா போட்டிகள் வட்டாரக் கல்வி அலுவலர் சி.சித்ரா தலைமையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்களாக நடைபெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் மகேஷ் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்.எல். ஏ கோ. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்களால் இசைக்கருவிகள் வாசிப்பு, சிலம்பாட்டம், பறையாட்டம் கரகாட்டம், தெருக்கூத்து, உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் அதிமுக பேரூராட்சி செயலாளர் சிவகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலைநிக ழ்ச்சிகளை கண்டுகளித்தனர். முடிவில் ஆசிரியர் இராமு நன்றி கூறினார்.

    ×