search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடம் சம்மந்தமாக முன் விரோதம்"

    • இடம் சம்மந்தமாக 2 பேருக்கும் இடையே தகராறு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் (55) என்பவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான ராஜா (60), இவரது மனைவி நிவேஸ்குமாரி (45), கோகுல் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ஆறுமுகம் கந்திலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×