search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராக்கள் உடைப்பு"

    • சிறுவன் உட்பட 4 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயி. இவர் நிலத்தகராறு காரணமாக கடந்த 2022-ம். ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை சம்பவம் நடைபெற காரணமாக இருந்த பிரச்சனைக்குரிய அந்த நிலத்தை கண்காணிக்க கொலை செய்யப்பட ராமமூர்த்தியின் மகன் தினேஷ்குமார்(31) ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு அங்கு பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி திருடிச் சென்றனர்.

    இது குறி்த்து தினேஷ்குமார் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமமூர்த்தி கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுவன், சிறுவனின் தந்தை மகேந்திரன்(40), பார்த்திபன்(23), விமல்குமார்(22) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×