search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்"

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தி.மு.க. நகர செயலாளர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், நகர மன்ற துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன், நகர அவைத் தலைவர் இரா. மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ஆ. சுரேஷ், மாவட்ட பிரதிநிதி பு. பாஸ்கர் நகர பொருளாளர் த. இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதன செய்து கொண்டனர்.

    இதில் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×