search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம்போல் மழைநீர்"

    • ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது
    • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே மொலகாரம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இதனால் மொல காரம்பட்டி - குனிச்சி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்க ப்பட்டது. தண்டவாளத்தை கடந்து செல்லும் மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அலட்சியமாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    தண்டவாளத்தை கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×