search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறைக்கு வெடி"

    • சத்தம் கேட்பதால் மக்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர்
    • உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணூர் பகுதியில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அந்த இடத்தில் அதிகளவு பாறைகள் இருப்பதால் டிராக்டர் கம்ரஷர் மூலம் துளையிட்டு அதனை வெடிவைத்து தகர்க்கும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் அவ்வப்போது திடீரென வெடி சத்தம் கேட்பதால், அந்த பகுதி மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் அங்குள்ள வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெத்தகல்லுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மேனகா அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று, அனுமதியின்றி பாறைகளுக்கு வெடி வைக்க துளையிட பயன்படுத்திய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் வீட்டுமனையின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×