என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேனர்கள் கிழிக்கப்பட்டன"
- சுப்பிரமணிய சாமி திருக் கோயில்
- சஷ்டி விழாவினை முன்னிட்டு
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக் குட்பட்ட தேரடி வீதியில் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் நடைபெறு வது போல் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சஷ்டி விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கோயில் முன்பு பேனர் வைக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
அப்போது அங்கிருந்த வர்களுக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பேனர்கள் கிழிக்கப்பட்டு கொடி கம்பத்தில் இருந்து கொடியை அறுத்து கீழே போட்டு செருப்பு காலுடன் மிதித்ததாகவும் மேலும் அந்த செருப்பினை கழற்றி கோயில் முன்பு உள்ள சிலைகள் மீது வீசியதாகவும், இது முருகப்பெருமான் சிலை மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஒரு தரப்பினார் புகார் அளித்துள்ளனர். இதன் மீது திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கோவில் நிகழ்ச்சி யில் இதுபோல் செருப்பு வீசிய சம்பவம் முருக பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்