search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது"

    • பொருட்கள் தீயில் கருகி நாசமானது
    • தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் தயாநிதி என்பவரின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்துள்ளது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

    இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×