என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது தகராறு"
- தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர்.
- மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள வெற்றிலையூரணி அரசரடி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே ஆலையில் விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் பெரும்பாலான நேரங்களில் பணி முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொலையுண்ட சுந்தரின் தாய் வெள்ளத்தாய் (70) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மதன்குமார், சரவணக்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான நாகேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் சுந்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்