search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தவார சமையல் டிப்ஸ்"

    • ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.
    • தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை தூளாக்கி அதனை மாவுடன் சேர்க்கவும். அப்படி செய்தால் பக்கோடா மொறு மொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

    * சப்பாத்தியை சுட்டெடுத்ததும் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் சப்பாத்தியின் அடியில் வியர்த்து ஈரமாவது தடுக்கப்படும்.

    * தேங்காய்த் துருவல் மீதமானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிப்போகாது.

    * கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்பு பலகாரங்களை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

    * தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

    * பாயசத்திற்கு உலர் திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    • சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.
    • இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் அருமை.

    1. அடை மாவு, தோசை மாவு புளித்து விட்டால், இரண்டு டம்ளர் வெந்நீர் விடவும். பத்து நிமிடம் கழித்து தெளிந்த நீரை கொட்டி விட்டால் புளிப்பு குறைந்து விடும். பின்பு ஒரு பிடி ரவை அல்லது அரிசி மாவு கலந்தால் சரியாகிவிடும்.

    2. பாசிப் பயறு சுண்டல் செய்வதற்கு, முதல் நாள் இரவு தண்ணீரில் பாசி பயறை ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு துணியில் கட்டி வைத்தால் முளைகட்டி விடும். இதை சுண்டல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு கூடுதல் சத்தும் கிடைக்கும்.

    3. சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.

    4. ஓட்ஸ் உடன் ஒரு பிடி அவல், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

    5. கத்தரிக்காய், பூசணி போன்ற புளிக்கூட்டு செய்யும்போது கடலைப் பருப்பை கொஞ்சம் குறைத்து விட்டு, மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவை கூடும்.

    6. தேங்காய் துவையல் அரைக்கும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

    7.பாகற்காய், குடை மிளகாய் போன்றவற்றை சிறியதாக நறுக்கி உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்தால் ஊறுகாய் ரெடி.

    8. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, வெல்லம் போன்றவற்றை ஒன்றாக கலந்து மாலையில் நொறுக்குத்தீனியாக சாப்பிடலாம்.

    9. கோவைக்காய், மிளகாய் இவற்றை மிகச் சிறியதாக நறுக்கி பொரியல் செய்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

    10. இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் சுவையோ சுவை.

    ×