search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 உலகக் கோப்பை"

    • இந்தியாவின் முஷீர் கான் அதிரடியாக ஆடி 118 ரன்களும் எடுத்தார்.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 100 ரன்களில் சுருண்டது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதல் லீக் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முஷீர் கான் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் உதய் சஹாரன் அரை சதம் கடந்து 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது.

    அயர்லாந்து அணி சார்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டும், ஜான் மெக்நல்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. இந்திய வீரர்களின் துல்லிய பந்துவீச்சால் அயர்லாந்து 100 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியாவின் நமன் திவாரி 4 விக்கெட்டும், சவுமி பாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 6 வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

    இந்தியா வரும் 28-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
    • அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    கொழும்பு:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது. 

    ×