என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகன போக்குவரத்து"
- சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் வாகன போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது.
இந்நிலையில், சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிரகப்பிரவேசம் நகர் அருகே சிறு பாலம் ஒன்று ரூ.80 லட்சம் செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி 80 சதவிகிதம் முடிந்து உள்ளது. ஆனால், மீதி உள்ள பணிகள் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இவ்வாறு இப்பகுதியில் வாகன விபத்து என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. எனவே, இப்பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பணி நடைபெறாததால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பாலபணியை முடித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்