search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா முகாம்"

    • 1,188 பேர் மனு அளித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி முன்னிலை வகித்தார். வாணியம்பாடி சப்-கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலூகாவை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை கேட்டு 1,188 பேர் மனு அளித்தனர்.

    இதில் உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி, ஆம்பூர் தாசில்தார் குமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் , வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    ×