search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டு விலை"

    • பூண்டு உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
    • தற்போது சீன பூண்டு ரகசியமாக கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பூண்டு உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் இதயத்துக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதனால் உணவில் அன்றாடம் பூண்டை பயன்படுத்தும் பழக்கம் தமிழ்நாட்டில் அதிகம்.

    இது தவிர ஊறுகாயாக தயாரித்தும் பயன்படுத்துகிறார்கள். எனவே பூண்டு விலை அதிகரித்தாலும் வியாபாரம் அமோகமாக நடக்கும்.

    தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலை பிரதேசங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த பகுதியில் பருவமழை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு பூண்டு மகசூல் இல்லை.

    ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ பூண்டு மட்டுமே அறுவடை செய்யப்பட்ட தாகவும் ஆனால் அதற்கான செலவு ரூ.3 லட்சம் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

    அறுவடை செய்யப்பட்ட பூண்டை கிலோவுக்கு ரூ.340 என்று மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்ததாகவும் ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயி ஒருவர் கூறி உள்ளார். இந்த பூண்டுகள் சில்லரை விலைக்கு கிலோ ரூ.450 முதல் ரூ.600 வரை விற்கிறது.

    இப்போது பூண்டிலும் சீனாக்காரர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டுகள் குஜராத் வழியாக தமிழகத்துக்கு வருவதாக கூறப்படுகிறது.

    சீன பூண்டுகளை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.300-க்குள் கொள்முதல் செய்து மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதாக கூறுகிறார்கள்.


    120 முதல் 150 டன் சீன பூண்டுகள் கண்டெய்னர்கள் மூலம் குஜராத் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரமளவு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பூண்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. இப்போது மலைப்பூண்டு வரத்து குறைந்து சீன பூண்டுகள் அதிகம் விற்கப்படுகிறது.

    இந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படும்போது பூச்சி கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அந்த பூண்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் இப்போது ரகசியமாக கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் பூண்டு மொத்த வியாபாரி பாபு கூறியதாவது:-

    ஊட்டி பகுதியில் விளையும் பூண்டு லேசாக கருப்பு மற்றும் பிரவுனாக இருக்கும். புகை பூண்டு என்றும் சொல்வார்கள்.

    இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வரும் பூண்டுகள் தூய வெண்மையாக இருப்பதால் மக்கள் அதையே விரும்பி வாங்குகிறார்கள்.

    ஆனால் அங்கு விளை விக்கப்படும் பூண்டுகளின் விதைப் பூண்டுகள் இங்கிருந்தே செல்கின்றன. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் விளையும் பூண்டுகள் வடுகப்பட்டி வழியாக விதைக்காக இமாச்சல் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறது.

    இமாச்சலில் இருந்து வரும் பூண்டுகள் மலைப் பூண்டு எனப்படும். இதுதான் மருத்துவ குணம் உடையது. மத்திய பிரதேசத்தில் இருந்து வருவது நாட்டு பூண்டுகள் எனப்படும்.

    கோயம்பேட்டில் தினமும் சராசரியாக 20 டன் பூண்டு விற்பனையாகிறது. முதல் ரகம் கிலோ ரூ.400 ஆகவும் குறைந்தது கிலோ ரூ.200-க்கும் விற்கப்படுகிறது என்றார்.

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரியில் தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து வருகிறது
    • உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகம் உள்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது.

    அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் சமையலுக்கு முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    தருமபுரி காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாட்டு பூண்டு ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய பூண்டு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல் பூண்டு ரூ 160 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரண்டு மாதத்தி ற்கு மேலாக பூண்டு விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    வரத்து குறைவால் தருமபுரி உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    உச்சத்தைத் தொட்டு வரும் பூண்டு விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், இல்ல த்தரசிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×