என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம்"
- 2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி.
- நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம்- கிரிக்கெட் சங்கம்.
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டி தொடங்க இன்னும் ஐந்து மணி நேரமே இருக்கும் நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது எனத் தெரிய வந்துள்ளது.
2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்காலிகமாக மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பாக்ஸ் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் (floodlights) ஜெனரேட்டர் மூலம்தான் இயக்க முடியும்.
ராய்ப்பூர் கிராமப்புற வட்ட பொறுப்பாளர் அசோக் கந்தெல்வால், "கிரிக்கெட் சங்க செயலாளர் தற்காலிகமாக செயல்திறனை அதிகரித்துக் கொடுக்க விண்ணப்பம் செய்திருந்தார். ஆயிரம் கிலோவாட் கேட்ட நிலையில் 200 கிலோவாட் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வேலை இன்னும் தொடங்கப்படவில்லை" என்றார்.
2018-ம் ஆண்டு மாரத்தான் போட்டியின்போது, மைதானத்தில் மின்சாரம் வசதி இல்லை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அப்போதுதான் 2009-ம் ஆண்டில் இருந்து மின்சார கட்டணம் கட்டவில்லை. 3.16 கோடி ரூபாய் பாக்கி உள்ளது எனத் தெரியவந்தது.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு பொதுப் பணித்துறையிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செல்லவை விளையாட்டுத்துறை ஏற்கவேண்டும். மின்கட்டணம் விவகாரத்தில் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
மின்சாரத்துறையில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிய போதிலும் இரு துறைகள் சார்பில் நிலுவைத் தொகையை கட்டவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட மூன்று சர்வதேச போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருனேஷ் சிங் பரிஹார் கூறுகையில் "பெரிய போட்டிகள் என்பதால் மின்சாரம் குறித்து கவலை கொள்கிறார்கள். நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம். இருந்தபோதிலும், மைதான விளக்குகள் விவகாரம் கவலை அளிக்கிறது. எவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்று எனக்குத் தெரியாது. மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் தற்காலிக இணைப்பு வாங்கப்பட்டுள்ளது" என்றார்.
சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்படும் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள விசயம் ஆச்சர்யமாக உள்ளது. மேலும், இரு துறைகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையால் மின்சாரத்தை பெற முடியாத இல்லையில் மைதானம் அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்