search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண முகாம்கள்"

    • அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
    • பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

    இந்நிலையில கேரள மாநிலத்தில் வருகிற 5-ந்தேதி கரை கமனழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட டுள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூசன் மையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அதேபோல் பாலக்காடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி கள், டியூசன் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.

    இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

    • 83 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆயிரத்து 300 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    வயநாடு நலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நடந்துவருகிறது. நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.

    பெரிய பெரிய பாறைகள் விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டதாலும் உடல்கள் சிதைந்தநிலையிலேயே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது.

    • 411 நிவாரண முகாம்களில் 5565 குடும்பங்களை சேர்ந்த 18,750 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
    • நிவாரண முகாம்கள் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களுக்கும் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடந்து சென்ற நிலையில், கடலோர மாவட்டங்களில் அதிக மழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் பேரிடர் துறை சார்பில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

    இதையொட்டி 411 நிவாரண முகாம்களில் 5565 குடும்பங்களை சேர்ந்த 18,750 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு 52 ஆயிரத்து 981 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

    நிவாரண முகாம்கள் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களுக்கும் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.

    அந்த வகையில் சென்னையில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 280 உணவு பாக்கெட்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64,380 உணவு பொட்டலங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 58 உணவு பொட்டலங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 ஆயிரத்து 983 உணவு பொட்டலங்கள் என மொத்தம் 8 லட்சத்து 44 ஆயிரத்து 601 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக 1-ந்தேதி முதல் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×