search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் ஆசிய கோப்பை 2023"

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.

    முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

    இதில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் குல்கர்னி - முசீர் கான் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குல்கர்னி 70 ரன்களிலும் முசிர் கான் 48 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

    • ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார்.
    • இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட் 26 ரன்னிலும் 2-வது விக்கெட் 75 ரன்களிலும் விழுந்தது.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×