search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.
    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் 1.5 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்கத்து ஊர்களில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் தங்கியுள்ளனர்.

    தற்போது வரை சில கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மூலமும் உணவு வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் சாலை வசதி துண்டாகி இருப்பதால் படகு மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மேற்கூரைகள் இல்லாமல் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. புன்னக்காயல் பகுதியில் வெள்ளம் வடிந்தாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் இன்னும் அந்த பகுதி தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது.

    இதேப்போல ஏரல் பகுதியே உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கும் ஏராளமான வீடுகள் முழுமையாக இடிந்துள்ள நிலையில் இங்குள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் வெள்ளத்தில் விளைநிலங்கள் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் வெள்ளத்தில் இறந்து போனதால் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.

    இதேப்போல உடமைகள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்து விட்டதால் இப்பகுதி மக்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது நிவாரண முகாம்களில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து முழுமையாக மீள்வது எப்போது என்ற கவலையில் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தில் ஓடும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததால், அந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை த்துறை சார்பில் கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. இதையொட்டி வாகனங்கள் செல்ல அதன் அருகில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்த மிக கனமழையின் காரணமாக தளவாய்புரம் கால்வாயிலும் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. இந்த வெள்ளத்தால் தற்காலிக பாதை உடைந்தது. தற்போது மழை ஒய்ந்த நிலையில் தற்காலிக பாதை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. தளவாய்புரம் வழியாக களக்காடு-நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான ராஜபுதூர், ரோஸ்மியாபுரம், பணகுடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் தளவாய்புரம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. இன்று 6-வது நாளாக அங்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    எனவே தற்காலிக பாதையை சீரமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய பால கட்டுமான பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால், நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் விளைநிலங்கள் மண் மேடாக காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் தூத்துக்குடி நகர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதேப்போல தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பும் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் 6-வது நாளாக இன்று வரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    • 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
    • மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை குறித்த எச்சரிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ன?

    * சென்னையில் ரூ.4000 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை அமைச்சர்கள் கூறினார்கள்.

    * முதலில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக ஒரு அமைச்சர் கூறினார். பின்னர் 42 சதவீதம் மட்டும் நிறைவு பெற்றதாக மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 42 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள். அதிலும் சந்தேகம்.

    * மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.


    * 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்ச்சாட்டை ஏற்க முடியாது.

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் அதிநவீனமானவை.

    * காப்பீட்டு நிறுவனங்கள் டிச.19ம் தேதியே சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின.

    * 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார்.

    * வெள்ள பாதிப்பின் போது டெல்லியில் இருந்து கொண்டு, மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?

    * மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    * தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    * இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.
    • தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தென்மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.

    * வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.

    * தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    * இந்த வருடத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியும், முன்னதாகவே இரண்டாவது தவணையாக ரூ.450 கோடியும் வழங்கப்பட்டது.

    * சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மிகவும் அதிநவீனமானது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே அறிவித்தது.

    * ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் மூலம் கனமழை குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது.

    * முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
    • தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.

    மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
    • ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.

    * உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது.

    * வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

    * காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

    * மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.

    * நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது.

    * மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.

    * ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது.
    • சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேதம் அடைந்தது. இந்த வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    எனவே வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து அவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேதமடைந்த வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை 780 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த 780 வீடுகளில் முற்றிலும் சேதம் அடைந்த வீடுகள், பக்கவாட்டு சுவர்கள் இடிந்த வீடுகள் என பல தரப்பிலான சேதங்களும் அடங்கும். இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    முற்றிலுமாக சேதம் அடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு ரூ.8ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
    • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

    இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    நெல்லை:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலில்,

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 212 வீடுகளுக்கு முதல்கட்ட நிதியாக 8.96 லட்ச ரூபாய் மாவட்ட பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

    * தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

    * நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
    • தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லையில் அதிகனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான மக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தூத்துக்குடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட், பால், பிரட் உள்ளிட்டவைகள் வழங்கும் பணியிலும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அரசு சார்பில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைத்தாலும் அவை மக்களின் வயிறை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற நிலை இருந்தது.

    பெரும்பாலான மக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரல், கேம்பலாபாத், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவில்களில் உள்ள ஜெனரேட்டர் வசதிகளை பயன்படுத்தி தங்களது செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காகவும், அரசுக்கு துணை நிற்கும் வகையில் தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு அமைப்புகளும் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 3 நாட்களாக உணவு தயாரித்து வழங்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது செல்போனில் வாட்ஸ்-அப்பில் குழு ஒன்றை தொடங்கி உள்ளனர். அதில் வசதி படைத்த வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மதம் பாகுபாடு இல்லாமல் கோவில்களிலும், மசூதிகளிலும் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் வண்ணம், வேறுபாடுகளை களைந்து மனித நேயத்தின் அடிப்படையில் ஏராளமானவர்கள் தங்களது பங்களிப்பை பணமாகவும், பொருளாகவும் வழங்கி வருகின்றனர்.

    அதனை வைத்து தூத்துக்குடி மாவட்ட தன்னார்வலர்கள் காய்கறிகள் வாங்கி சமைத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சாலைகள் துண்டிப்பால் கிராமங்களில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் சமையல் செய்து உணவுகளை பொட்டலங்களாக தன்னார்வலர்கள் எடுத்துச்சென்று வழங்கி வருகின்றனர். தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் உணவு வழங்குகின்றனர்.

    தூத்துக்குடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னார்வலர்கள் ஒரு மினி லாரி மூலமாக பல கிலோ மீட்டர்கள் சுற்றி நெல்லைக்கு வந்து மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குகின்றனர். பின்னர் அதனை எடுத்துச்சென்று பொதுவான ஒரு இடத்தில் வைத்து சமைத்து அங்கிருந்து பொட்டலங்களாக எடுத்துச்சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    சென்னை பெருவெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த பொருட்களை நிவாரணமாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தென்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இவை அனைத்தும் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும், சகோதரத்துவம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாகவும் இருந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனலாம். 

    • உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கின்றன. தூத்துக்குடியில் மின்சார துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றுபவர் சுதா ராஜ்குமார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. கணவரும் வெளியூரில் இருக்கிறார். கடந்த 17-ந்தேதி பெரும்வெள்ளத்தில் சுதாவின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.

    இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். அன்று முதல் தொடர்ந்து அங்கேயே பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முகாமிட்டுள்ள மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி சுதாவின் பணியை பாராட்டி உள்ளார்.

    தற்போதைய நிலவரம் குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் இன்னும் சில கிராமங்களில் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் வடிய வடிய இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் நகர பகுதியில் இன்று மாலைக்குள் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கிறோம். 2,500-க்கும் மேற்பட்ட பணியார்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் நின்று பணியாற்றுகிறார்கள். ஒவ்வொருவரின் பணியும் பாராட்டுக்குரியது என்றார்.

    உதவி பொறியாளர் சுதா ராஜ்குமார் கூறியதாவது:-

    அண்ணாநகர் 7-வது தெருவில் பக்கிள் ஓடை அருகில் குடியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் வெள்ளம் வரத்தொடங்கியது. காலை 7 மணி அளவில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் குழந்தைகளை கொண்டு விட்டேன். எல்லா இடங்களிலும் நிலைமை மோசமானதால் பணிக்கு அழைத்தார்கள். வீட்டில் இருந்து நடந்தே மின் நிலையத்துக்கு சென்றேன்.

    உயர் அதிகாரிகள் அனைவருமே களத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்றார்.

    ×