search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024 ஏலம்"

    • ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது.
    • குஜராத் அணியில் ராபின் மின்ஸ் தேர்வாகியுள்ளார்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ்-ஐ குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. 21 வயதான ராபின் ரூ. 20 லட்சம் எனும் அடிப்படை விலையில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்க பல அணிகள் போட்டியிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

     


    பெரிய ஷாட்களை அடிப்பதில் பெயர்பெற்ற ராபின் மின்ஸ் இடதுகை பேட்டர் ஆவார். மகேந்திர சிங் டோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அனுபவம் மிக்க முன்னாள் இந்திய அணி வீரர் சான்ச்சல் பட்டாச்சார்யா பயிற்சியாளராக உள்ளார். இவர் 19 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜார்கண்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

    இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

    • பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றுள்ளார்.
    • மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுகிறார்.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை முதல் முறையாக ஒரு இந்தியர் முழுநேரமாக நடத்த இருக்கிறார். மேலும் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் முதல் முறையாக பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றிருக்கிறார்.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) ஏலத்திலும் மல்லிகா சாகர் ஏலதாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 மற்றும் 2024 (டபிள்யூ.பி.எல்.) ஏலங்களில் ஏலதாரராக இருந்த மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

     


    48 வயதான மல்லிகா சாகருக்கு ஏலம் விடும் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு முன்பு இவர் ப்ரோ கபடி லீக் ஏலங்களில் ஏலதாரராக இருந்துள்ளார். மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் கலை துறையிலும் அனுபவம் மிக்கவர் ஆவார்.

    மும்பையில் உள்ள பண்டோல் கலை காட்சியகங்களில் பல்வேறு ஏலங்களில் இவர் ஏலதாரராக செயல்பட்டுள்ளார். உலக புகழ் பெற்ற கிரிஸ்டீஸ்-இல் ஏலதாரர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையை மல்லிகா சாகர் தனது 26-வது வயதிலேயே பெற்றிருந்தார். 

    ×