search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோத பண மோசடி தடுப்பு"

    • ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது.
    • ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மாநில நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜாமின் என்பது விதி... சிறை என்பது விதிவிலக்கு என்ற பொதுவான சட்டக் கொள்கை PMLA சட்டத்திற்கும் பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது. ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே. PMLA சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவாக ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி என நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்ததுடன், பிரேம் பிரகாஷ்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கின்போது தனிநபரின் சுதந்திரம் எப்பொழுதும் விதி மற்றும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் மூலம் அதை மறுப்பது விதிவிலக்காகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    • விவோ மீது 62 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவாகி உள்ளது
    • தூதரக வழி உதவிகள் கிடைக்க நாங்கள் துணை நிற்போம் என சீனா தெரிவித்தது

    இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் அவற்றை சில ஆண்டுகளாக இந்தியா கண்காணித்து வருகிறது.

    இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்று, விவோ (Vivo). இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறது.

    நேற்று முன் தினம், விவோ இந்தியாவின் அதிகாரிகளில் சீனாவை சேர்ந்த தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹாங் சுகுவான் (Hong Xuquan), தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகிய மூவரை பண மோசடி தடுப்பு சட்டத்தில் (PMLA) அமலாக்க துறை கைது செய்தது.

    வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து ரூ. 62,476 கோடி சட்டவிரோதமாக சீனாவிற்கு விவோ பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் இவ்வழக்கில் முன்னரே 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. இந்திய பொருளாதார இறையாண்மையை குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக இவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் தனது நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் தூதரக வழி பாதுகாப்பை வழங்க போவதாக சீனா தெரிவித்துள்ளது.

    மேலும், இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning), "நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலனையும் உறுதிப்படுத்த சீனா ஆதரவளிக்கும். ஆனால், ஒருதலை பட்சமாக சீன நிறுவனங்களின் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.

    ×