search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மக்களவை தேர்தலுடன் வருகிற 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    அத்துடன் 60 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது, 27-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. 28-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்றுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி பா.ஜனதா முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் 10 பேரும் ஒருமனதாக எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    என்றபோதிலும் ஜூன் 4-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இட்டாநகர் மற்றும் டெச்சி கசோ தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிராமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முக்டோ, சவுக்காம், சகாலீ, தலி, தலிஹா, ரோய்ங், ஜிரோ-ஹபோலி, இட்டாநகர், மொம்திலா, ஹயுலியாங் ஆகிய தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் பா.ஜனதா வேட்பாளர்கள் ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பீமா கண்டு, சவ்னா மெய்ன் ஆகியோர் முறையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆவார்கள்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
    • தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்

    • நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற மக்களை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே மாதம் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது.

    பல்வேறு மாநில கட்சிகள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை இன்று அறிவித்துள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ள ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரசேதம், ஒடிசா, குஜராத், அசாம், சத்தீஷ்கர், மத்தயி பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.

    • தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிட மறுப்பு.
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் காசில்லை. ஆனால் அவர் பையில், படுக்கை அறையில் பணம் உள்ளது.

    இந்தியாவின் சர்வாதிகாரம் என அமெரிக்க, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்.

    தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளது.
    • ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை.

    பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், "பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக" குறிப்பிட்டார்.

    மேலும் அவர், "பெரம்பலூர் எம்பி தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வழங்கப்படும்.

    தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை" என கூறினார்.

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

    • முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நடைபெற உள்ளது.

    இதனால், தேர்தலில் வெற்றி கனியை சுவைக்க, கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு மூன்று முறை வந்து பிரசாரம் நடத்தினார்.

    இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப்ரல் 4ம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னையை அடுத்து, மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க கோரிக்கை.

    கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 24 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பல்லாரி ஆகிய 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 4 தொகுதிகளிலும் டிக்கெட் பெற பலரும் முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

    குறிப்பாக கோலாரில் உணவுத்துறை மந்திரி கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார். இன்னொரு புறம் அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறி வருகிறாா்கள். இதனால் முடிவு எடுக்க முடியாமல் கட்சி மேலிட தலைவர்கள் திணறி வருகிறார்கள்.

    இதற்கிடையே மந்திரி கே.எச். முனியப்பாவின் மருமகனுக்கு கோலார் தொகுதியில் டிக்கெட் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், நஞ்சேகவுடா, கொத்தனூர் மஞ்சுநாத், எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில்குமார் ஆகிய 5 பேரும் கடும் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

    மேலும் பங்காருப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமியும் ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று காலை அறிவித்தனர்.

    மங்களூருவில் உள்ள சபாநாயகர் யு.டி.காதரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தொலைபேசியில் பேசி அனுமதி பெற்றனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூரு செல்ல தனி விமானத்தையும் முன்பதிவு செய்தனர். இதனால் விழித்தெழுந்த கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ், அதிருப்தியாளர்களை அழைத்து தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில் குமார் ஆகிய 2 பேரும் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு (சட்டசபை) வந்து மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்தனர். அவர்கள் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை வழங்க முற்பட்டனர். அப்போது மந்திரி பைரதி சுரேஷ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

    அவர்களிடம் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தொலைபேசியில் பேசி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து அவர்கள் தங்களின் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சபாநாயகர் யு.டி.காதர், தானே பெங்களூருவுக்கு வருவதாகவும், நீங்கள் மங்களூரு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் முன்பதிவு செய்த தனி விமானத்தை ரத்து செய்துவிட்டனர். இதுபற்றி கொத்தனூர் மஞ்சுநாத் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    'கோலார் தொகுதியில் தலித் சமூகத்தில் வலது சாரி பிரிவுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று நாங்கள் கூறி வருகிறோம். எக்காரணம் கொண்டும் மந்திரி கே.எச். முனியப்பாவின் குடும்பத்திற்கு வாய்ப்பு அளிக்கவே கூடாது என்று ஏற்கனவே கூறினோம்.

    ஆனால் அதையும் மீறி கட்சி அவரது குடும்பத்திற்கு டிக்கெட் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிந்தோம். வாய்மொழியாக சொன்னால் சரிப்பட்டு வராது. அதனால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம். இன்று (நேற்று) பகலில் பெங்களூரு செல்கிறோம். சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குவோம்'

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், தற்போதைய உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் ஆகியோர், கே.எச்.முனியப்பாவின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கு டிக்கெட் கொடுத்தாலும் அவரை வெற்றியுடன் அழைத்து வருகிறோம் என்று கட்சி மேலிடத்திடம் கூறியுள்ளனர்.

    ஒருவேளை தனது மருமகனுக்கு டிக்கெட் வழங்காவிட்டால், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் சார்ந்துள்ள இடதுசாரி பிரிவு சமூக மக்களிடம் மாநிலம் முழுவதும் பயணம் செய்து நீதி கேட்பேன் என்று கே.எச். முனியப்பாவும் காங்கிரஸ் மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த கோஷ்டி பிரச்சினையால் கோலார் தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறி வருகிறார்கள். கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் கோலார் மாவட்ட காங்கிரசாரை முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கோலார் தொகுதிக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஆனால் கோலார் தொகுதியில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோலார் மாவட்ட காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
    • போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    • அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.
    • தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    தென்காசி, விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பரப்புரை தொடங்கியது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும், தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். பிரசாரத்தில் இன்றோடு 10 தொகுதிகளை கடக்கிறேன்.

    செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்.

    அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள்

    தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர்.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

    சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்தது..?

    சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லி, மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டது.

    இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ.1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது.

    இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28% ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக.

    புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார்.

    தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    செய்யும் அரசு, செய்யப் போகும் அரசு தான் திராவிட மாடல் அரசு. திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காக தான். நம் உரிமைகளை பறிக்கும் கூட்டம் தான் பாஜக.

    சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.

    ×